ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தாரிடம் இந்தியா தோல்வி
சென்னை: ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்திய அணி 53-69 என கத்தாரிடம் தோல்வியடைந்தது.
சவுதி அரேபியாவில், அடுத்த ஆண்டு (ஆக. 5-17) ஆசிய கோப்பை கூடைப்பந்து 31வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.
தொடர்ச்சியாக 3 தோல்வியை பெற்ற இந்தியா, ‘இ’ பிரிவில் 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. நவ. 25ல் சென்னையில் நடக்கவுள்ள 4வது போட்டியில் இந்திய அணி, மீண்டும் கஜகஸ்தானை எதிர்கொள்கிறது.