நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது! ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவிப்பு..!!
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.
அந்த வகையில், பத்மபூஷன் விருதுகள் 23 பெண்கள் உட்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கலைத்துறையில் செய்த சாதனைக்காக நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
நடிகர் அஜித், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து துணை ஹீரோவாக மாறி பின்னர் ஹீரோவாக ஆன அஜித், எந்த விதமான சினிமா பின்புலமும் இன்றி திரையுலகிற்கு வந்தவர். இதனாலேயே இவருக்கு அதிகளவில் ரசிகர் கூட்டம் இருந்தது. அஜித்திற்கு, அவர் நடிக்கும் திரைப்படத்தை விட வேறு எந்த நேரத்திலும் கேமரா முன்னிலையில் இருக்க பிடிக்காது. பிரைவசியை விரும்பும் இவர், தனது குடும்பத்தினரையும் கேமராவின் கண்களில் இருந்து பாதுகாப்பார். அது மட்டுமல்ல, இவர் வேறு எந்த சமூக வலைதளத்திலும் கூட இல்லை.
அஜித்திற்கு, இந்த பத்மபூஷன் விருது கிடைத்ததை தொடர்ந்து, பலரும் இவர் குறித்து பெருமைக்குரிய போஸ்ட்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சேகர் கபூர் அவரது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “என்ன ஒரு கௌரவம்! இந்திய அரசு என்னை #பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவராக கருதியதற்கு நான் பணிந்து போகிறேன். இந்த விருது நான் ஒரு பகுதியாக இருக்கும் தொழிலுக்கும், நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் அழகான தேசத்திற்கும் சேவை செய்ய என்னை மேலும் கடினமாக உழைக்க வைக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் திரைப்பட பார்வையாளர்களுக்கும் நன்றி, ஏனென்றால் நீங்கள் இருப்பதால் தான் நான் இருக்கிறேன்.” என உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்திருந்தார்.
பத்ம ஸ்ரீ அஸ்வின் ரவிச்சந்திரன்
இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அஸ்வினின் மனைவி உடன் இருந்தார்.
இந்த விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.