தி டோர் சி​னிமா விமர்சனம் : தி டோர் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான, குறைந்தபட்சம் திகிலூட்டும் அனுபவம் தரும் | ரேட்டிங்: 3/5

0
308

தி டோர் சி​னிமா விமர்சனம் : தி டோர் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான, குறைந்தபட்சம் திகிலூட்டும் அனுபவம் தரும் | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
பாவனா – மித்ரா
கணேஷ் வெங்கடராமன் – ரைசுதீன்
ஜெயபிரகாஷ் – வேல்முருகன்
ஸ்ரீரஞ்சனி – தேவிகா
நந்தகுமார் – ரத்தினம்
கிரீஷ் – நாகலிங்கம்
பாண்டி ரவி – ஒப்பந்தக்காரர்
சங்கீதா – மேகா
சிந்தூரி – மரியா
பிரியா வெங்கட் – ஷாலினி
ரமேஷ் ஆறுமுகம் – விஷ்வா
கபில் – ராம்
பைரி வினு – இன்ஸ்பெக்டர் குமரன்
ரோஷ்னி – மீரா
சித்திக் – ராஜேந்திரன்
வினோலியா – பேய்

தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி நவீன் ராஜன்
இயக்குனர்: ஜெய்தேவ்
ஓளிப்பதிவு : கௌதம் ஜி
எடிட்டர்: அதுல் விஜய்
இசை: வருண் உன்னி
கலை இயக்குனர்: கார்த்திக் சின்னுடையான்
ஸ்டண்ட் மாஸ்டர்: மெட்ரோ மகேஷ்
ஆடை வடிவமைப்பு: வெண்மதி கார்த்திக்
பாடலாசிரியர்: இளங்கோ கிருஷ்ணன், முருகன் மந்திரம்
பாடியவர்கள்: கே.எஸ். சித்ரா, வருண் உன்னி
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சி.சிவச்சந்திரன்
தயாரிப்பு நிர்வாகி: எம்.விஜயகுமார்
ஸ்டில்ஸ்: ராஜா
விளம்பர வடிவமைப்பு: சந்திரு – தண்டூரா
ஒலிப்பதிவு: ஆர். கிருஷ்ணமூர்த்தி
மக்கள் தொடர்பு : பரணி

தனியார் நிறுவனத்தில் கட்டிடக்கலை வடிவமைப்பாளராக பணியாற்றும் மித்ரா (பாவனா) தான் வடிவமைத்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக அங்கு இருக்கும் ஒரு பழமையான சின்ன கோவில் ஒன்றை  இடிக்கிறார்கள். அதே நேரத்தில் ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை வேல்முருகன் (வழக்கறிஞர்) வானத்திலிருந்து ஒரு பனித்துளி விழுந்து, மர்மமான முறையில் இறந்து விடுகிறார். தந்தையின் மரணம் மித்ராவை மனதளவில் பாதிக்கிறது. மன உளைச்சலில் இருக்கும் மித்ரா ஆர்கிடெக்ட் பணியில் இருந்து விலக முடிவெடுக்கிறார். சில நாட்கள் கழித்து கட்டிடக்கலை உரிமையாளரும் மித்ராவின் குடும்ப நண்பருமான ஜெயபிரகாஷ் மித்ராவுக்கு ஆறுதல் கூறி, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணியை மித்ரா முடித்து தர வேண்டும் என்று கேட்கிறார். பிறகு மீண்டும் தன் பணியை தொடங்க ஊருக்கு வந்து அங்கு இன்னொரு பெண்ணுடன் வீட்டில் தங்கி இருக்கிறார். மித்ரா தன் பணியை தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் சிறு விபத்து நடக்கிறது. அவர் கண்களுக்கு அவ்வப்போது ஒரு பெண்ணின் உருவம் தென்பட்டு மறைகிறது. ஆனால் வீட்டில் தன் பெண் தோழி தூக்கத்தில் எழுந்து நடப்பது, சுவற்றில் முட்டி தன்னைக் காயப்படுத்திக் கொள்வது என்று வினோதமாக நடந்து கொள்கிறார். தனது நண்பர்களின் உதவியுடன் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாகவும், அது மித்ராவிடம் ஏதோ ஒரு உதவியை நாடுவதாகவும் சொல்கிறார். ஆனால் மித்ரா பேய் பிசாசில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். இருப்பினும் மித்ரா அந்த அமானுஷ்ய சக்திக்கும், தனக்கும் உள்ள தொடர்பு என்ன என்று ஆராய்கிறார். அப்போது அவர் சந்திக்கும் நபர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த மர்ம உருவத்திற்கும், மித்ராவுக்கும் மற்றும் அவரது தந்தைக்கும் என்ன தொடர்பு? புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கும், மர்ம மரணங்களுக்கு என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு படத்தின் மீதிக்கதை விடையளிக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாவனா கதையில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் திகில் மையத்தை தேவையான நம்பிக்கையுடன் வைத்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா உள்ளிட்ட அனைவரும் அமானுஷ்ய கதைக்கு தீவிரமான நடிப்பைக் கொண்டுவருகிறார்கள்.

ஒளிப்பதிவை கௌதம் ஜி கொடைக்கானல் குளிர்ச்சியான அழகிய சூழலைப் படம்பிடித்துள்ளார்.

வருண் உன்னின் இசை மற்றும் பின்னணி இசை சில இடங்களில் திகில் அனுபவத்திற்கான தொனியை அமைக்கிறார்.

திகில் கலந்த குற்றத் திரில்லரை படத்தொகுப்பாளர் அதுல் விஜய் இறுக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய வேகத்தில் எடிட் செய்துள்ளார்.

வழக்கமான ஒரு பேய் கதை களத்தைச் சுற்றி சுழல்கிறது என்றாலும் இது சற்று வித்தியாசமானது, திரைக்கதையில் சஸ்பென்ஸ் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திகில் கூறுகளை ஒன்றாக இணைத்து விறுவிறுப்பாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் ஜெய்தேவ்.

மொத்தத்தில் ஜூன் ட்ரீம்ஸ் ஸ்டுடியோஸ் எல்எல்பி நவீன் ராஜன் தயாரித்துள்ள தி டோர் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான, குறைந்தபட்சம் திகிலூட்டும் அனுபவம் தரும்.