ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது, டங்கி: தற்போது டிராப் 4 வெளியானது!
ஷாருக் கான் மற்றும் அவரது ‘சார் உல்லு தே பத்தே’ – ஆகியவை இணைந்து வாழ்நாள் பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது தி டங்கி: இந்த ஆண்டின் மிகவும் இதயத்தைத் தூண்டும் படமாக அமைந்துள்ள தி டங்கியின் டிராப் -4 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சியை அளித்துள்ளது. பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானியால் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஷாருக் கான் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகை டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. ரயிலில் நடிகர் ஷாருக் கான் (எஸ்ஆர்கே) பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக் கானின் கேரக்டர்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.





இந்த டிசம்பர் மாதத்தில், உங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்கு உரியவர்களுடனும் மகிழ்ச்சி தரும் வகையில் நீடித்த நினைவுகளை உருவாக்கி, நகைச்சுவை மற்றும் இதயப்பூர்வமான தருணங்களின் மகிழ்ச்சிகரமான கலவையை வழங்க டங்கி திரைப்படம் தயாராக உள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படம் 21 டிசம்பர் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.