கூல் சுரேஷ் மற்றும் நகைச்சுவை மன்னன் செந்தில் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!
PMS CINE ENTERTAINMENT சார்பில் முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கத்தில், கூல் சுரேஷ், செந்தில் மற்றும் எம் எஸ் ஆரோன் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
திரைத்துறையிலிருந்து இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக் பாஸ் ராணவ், ஷனம் ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்கஸ்டராக நடிக்க, எம் எஸ் ஆரோன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன் , ஸ்ரீவித்யா,வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க அதிரடி திருப்பங்களுடன் ஆக்சன் கமர்ஷியலாக உருவாகும் இப்படத்தின் ஷீட்டிங் ஆந்திரா மற்றும் கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து மற்றும் இயக்கம் : சாய் பிரபா மீனா
தயாரிப்பு : முரளி பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் : PMS CINE ENTERTAINMENT
இசை : நரேஷ்
ஒளிப்பதிவு : G.முத்து
படத்தொகுப்பு : நவீன் குமார்
கலை இயக்கம்: சுப்பிரமணி
நடன இயக்கம் : செந்தாமரை ரமேஷ் கமல்
பப்ளிக் சிட்டி டிசைன் : எஸ் கே ஜீவா
தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக் & முரளி
இணை இயக்குனர் : ஷரவன்
சண்டை பயிற்சி : சூப்பர் குட் ஜீவா