ட்ராமா சினிமா விமர்சனம் :  ட்ராமா பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் | ரேட்டிங்: 2/5

0
286

ட்ராமா சினிமா விமர்சனம் :  ட்ராமா பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் | ரேட்டிங்: 2/5

நடிகர்கள்:
சுந்தர் – விவேக் பிரசன்னா
கீதா – சாந்தினி
அஜய் குமார் – சஞ்சீவ்
ரகு – அனந்த் நாக்
செல்வி – பூர்ணிமா ரவி
ஜீவா – பிரதோஷ்
முருகேசன் – மாரிமுத்து​
பார்வதி – ராமர்
பிரதீப் கே விஜயன் – உண்மை புத்திரன்
மெக்கானிக் – ஈஸ்வர்
முதல்வராக நிழல்கள் ரவி
வையாபுரி போலீஸ் கான்ஸ்டபிள்

படக்குழு :
எழுதி இயக்கியவர் – தம்பிதுரை மாரியப்பன்
தயாரிப்பு – டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் எஸ் உமா மகேஸ்வரி
ஒளிப்பதிவு – அஜித் சீனிவாசன்
இசை – ஆர் எஸ் ராஜ்பிரதாப்
எடிட்டர் – முகன் வேல்
கலை இயக்குனர் – சி கே முஜிபுர் ரஹ்மான்
அதிரடி இயக்குனர் – சுரேஷ்
நடன இயக்குனர் – ஸ்ரீ கிரிஷ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வழக்கமான வாகன சோதனையின் போது, ஒரு காரின் டிக்கியில் ஒரு சடலம் இருப்பதை போலீசார் கண்டுபிடிக்கின்றனர். காரை ஓட்டி வந்தவர்கள் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள். அவர்கள் யார்? டிக்கியில் இறந்தவரை கொன்றது யார்? காரின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் கதை தொடர்கிறது. பின்னர் காட்சி கடந்த காலத்திற்கு நகர்கிறது, அங்கு சுந்தர் (விவேக் பிரசன்னா) மற்றும் அவரது மனைவி கீதா (சாந்தினி தமிழரசன்), குழந்தை இல்லாத தம்பதியினர், தனது ஆண்மைக் குறைபாட்டை மனைவி கீதாவிடம் மறைக்கிறார். அதே நேரத்தில், ஒரு மருத்துவர் இடமிருந்து அவருக்கு கருவுறுதல் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மற்றும் காதலர்கள் செல்வி (பூர்ணிமா ரவி) மற்றும் ஜீவா (பிரதோஷ்) ஆகியோரின் வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தக் கொலைக்கு வழிவகுத்தது என்ன என்பதை சில்லறை திருடர்களாக இருந்த இரண்டு நபர்கள் கார் திருடர்களாக மாறி திருடும் காரின் டிக்கியில் உள்ள பிணத்தால் பல மறைக்கப்பட்ட மோசமான மருத்துவ குற்றக் கும்பலை அம்பலப்படுத்த வழிவகுக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு கதைகள் ஒவ்வொன்றும் எப்படி தொடர்புடையது என்பதே படத்தின் மீதிக்கதை.

விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், அனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ராமர், உண்மை புத்திரன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி உட்பட அனைத்து நடிகர்களும் கதையின் போக்கிற்கு ஏற்ப தங்கள் இருப்பைப் பதிவு செய்துள்ளனர்.

வழக்கமான ஒரு மோசமான மருத்துவ குற்ற செயலில் ஈடுபட்ட கும்பலை பற்றிய கதையை, பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், மற்றும் பெர்டிலிட்டி சென்டர் மையமாக வைத்து வேறு விதமாக தம்பதிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல், என இரண்டு கதைகளாக உணர்ச்சி ஆழம் இல்லாத திரைக்கதை அமைத்து, பொறுமையை சோதிக்கும் காமெடியுடன், எந்த ஒரு விறுவிறுப்பு இல்லாமல் ஒரு ஹைப்பர்லிங்க் படமாக இயக்கி உள்ளார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.

மொத்தத்தில் டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ் உமா மகேஸ்வரி தயாரித்துள்ள ட்ராமா பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.